வாஷிங்டன்: ஆப்கானிலிருந்து ஆக 31-க்குள் படைகளை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்கர்களும் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த ஜோ பைடன், படைகளை திரும்பப்பெறும் முடிவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன்; ஆனால் அதுபற்றி ஆலோசனை நடக்கப்போகிறது. தலிபான்கள் அப்பாவி ஆப்கான் மக்களையும், அமெரிக்க படைகளை குறிவைப்பார்கள் என எங்களுக்கு தெரியும். தலிபான்கள் உள்பட எந்த பயங்கரவாத அமைப்பினரையும் நம்பவில்லை.