பாட்னா: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, பீகார் முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும்நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், நாளை பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்கிறார். அவருடன், பீகாரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் செல்கிறது. இந்த குழுவிற்கு முதல்வர் நிதிஷ்குமார் தலைமை தாங்குகிறார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்க உள்ளனர்.