தேனி: ஆடி மாதத்தில் திருமணம், கடை திறப்பு போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான நேற்றை நாளில், கடந்த மாதத்தில் திருமணம் நடத்த முடியாதவர்கள், கடைகளை திறக்க முடியாதவர்கள், புதிய தொழில் துவங்க முடியாதவர்கள் என பெரும்பாலானோர் விசேஷங்கள் நடத்தினர். இதன்காரணமாக தேனி நகரம் மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் பரவலாக அனைத்து ஊர்களிலும் திருமணம், புதிய வர்த்தக நிறுவன திறப்பு விழாக்கள் நடந்தன. இதில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் தேனி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் திரண்டனர்.