சென்னை: சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள என் தாயாரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் கிருஷ்ணகுமாரி (78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.