வாஷிங்டன்: ``ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவதில் உறுதியாக இருந்தேன்,’’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். ஆப்கன் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பைடன் கூறியதாவது: அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் சென்றது. அந்நாட்டை கட்டமைப்பதற்காக அல்ல. அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு இதை விட சரியான தருணம் இருந்திருக்க முடியாது. ஆப்கன் ராணுவத்தினர் போராடாமலேயே சரணடைந்து விட்டனர்.