சென்னை: வேலூர் விஐடியில் நேதாஜி பிறந்தநாள் விழா, பாரதியார் நினைவு விழா மற்றும் சுதந்திர தின விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.05 டிரில்லியன் டாலர். இதை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல், தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும். இதை சாத்தியமாக்க அனைவருக்கும் உயர்கல்வியை உறுதி செய்ய செய்ய வேண்டும். உலகளவில் இந்தியாவில்தான் சேமிப்பு பழக்கம் அதிகம் உள்ளது.