ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை..!

மதுரை: ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் மதுரை இல்லை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: