சென்னை : அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் புகாருக்கு பதிலளித்து பேசியுள்ள அவர், 2006,2007ம் ஆண்டு மாநில உற்பத்தியில் இருந்த கடன் 18%ஆக இருந்தது என்றார். அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அந்த கடனை குறைத்தார்.