டெல்லி: பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. தற்போது 2 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பெகாசஸ் விவகாரத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது அலைபேசிகளும் பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பொதுவாக இதுவொரு நாட்டிற்கு மட்டும் தான் இத்தகைய உளவுபார்க்கப்பட்ட விவகாரங்களை வழங்குவார்கள். தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும் தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரது அலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டது ஒன்றிய அரசுக்கு தெரிந்து தான் நடந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் என்.ராம், எடிட்டர்ஸ் பில்ட் என்ற அமைப்பு, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சார்பாக பொதுநல மனுக்கள், ரிட் மனுக்கள் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்தவாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் 2 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளனர்.