பாஜ கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி: கொடைக்கானலில் சர்ச்சை

கொடைக்கானல்: கொடைக்கானலில் பாஜ கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நேற்று 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகரில் உள்ள நாயுடுபுரம் டெப்போ பகுதியில் பாஜ கட்சி கொடிக்கம்பத்தில், அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஜான்சி கமலா தேசியக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாஜ கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related Stories: