பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ இறங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலரை கடத்தி பாலியல் பாலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக, 2019 பிப்ரவரி மாதம், அந்த கும்பலிடம் சிக்கிய ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் வசந்தகுமார், சதீஸ், மணிவண்ணன் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின், சிபிஐக்கு மாற்றப்பட்டு, அப்போதைய பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் (32), ஹெரன்பால் (27), பாபு (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.