புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட 5 ஆயிரடம் கணக்குகளை டிவிட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். சிறுமியின் பெற்றோரை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கிய டிவிட்டர், ராகுல் காந்தியின் கணக்கை முடக்கியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.