பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 50 லட்சம் மாணவ, மாணவியருக்கு தடையின்றி சத்துணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கண்டறிந்து கல்வியை தொடர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: