சென்னை: ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆர்யா. பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து அமேசான் ஓ.டி.டி.யில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண், ‘நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் நெருங்கி பழகியதாகவும் அவ்வப்போது ஆன்லைன் மூலம் தன்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்தார்’என சிபிசிஐடி போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார்.