பியாங்யாங் : கொரிய தீப கற்பத்தில் அமெரிக்கா, தென் கொரியா ராணுவத்தினர் இடையேயான கூட்டுப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்தால், அவை வட கொரியாவிடமிருந்து பெரிய அளவில் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்நோக்கக்கூடும் என வட கொரிய உயர் அதிகாரி கிம் யோ ஜொங் (Kim Yo Jong) எச்சரித்துள்ளார்.வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொரிய எல்லையில், அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கூட்டு ராணுவ பயிற்சியின் முன்னோட்டமாக 4 நாள் ஆரம்ப பயிற்சியை நேற்று இரு நாட்டு வீரர்களும் தொடங்கின. இதற்கு வடகொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.