பூந்தமல்லி: பூந்தமல்லி கரையான்சாவடியில் அரசு பொதுசுகாதார நிறுவனம் உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருது இங்கு வந்து தங்கி பயிற்சி பெற்றுச்செல்கின்றனர். இந்தநிறுவனவளாகத்தில் ஒரு குடோனில் 300க்கும் மேற்பட்ட பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குடோனிலிருந்து நேற்று திடீரென புகை வந்தது. உடனே ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அங்கிருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் தீப்பிடித்து எரியத்தொடங்கின. பூந்தமல்லி, மதுரவாயல், எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.