ஸ்டான்லி மருத்துவமனையின் முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி திடீர் தற்கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவ கல்லூரி உள்ளது.  இங்கு மருத்துவ மாணவர்கள் முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.  இங்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த சோபியா (27), முதுநிலை பயிற்சி மருத்துவர் அனஸ்தீஸ்யா 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்,  நேற்று பணிக்கு வராததால் சக மாணவர்கள் அவர் தங்கியுள்ள விடுதிக்கு பார்க்க சென்றுள்ளனர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில், வாயில் நுரையுடன் இறந்து கிடந்தார். உடல் நீல நிறத்தில் காணப்பட்டது. தகவல் அறிந்த ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.  இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: