மதுரை: மதுரையில் வீட்டில் நாய், மாடு வளர்த்தால் ரூ.10 வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது. தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினால் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இறைச்சி கடை, பிரியாணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.10 வரி வசூலிக்கப்படும். அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. திட்டக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.