கலைஞரின் நினைவு நாள் 500 பேருக்கு அன்னதானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், நத்தமேடு ஊராட்சியில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு கிளை செயலாளர் ப.சரவணன் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை வகித்து அன்னதானம் வழங்கினார். இதில் கிளை செயலாளர் குமரேசன், ஜோன்ஸ் பிரியதர்ஷினி ஸ்ரீதர், அபினேஷ், ரூபி குமரேசன், கெஜலட்சுமி, மகேஷ், இளங்கோ, பாலாஜி, அருள், சண்முகம், சதீஷ், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: