கர்னல்: அரியானா மாநிலம் கர்னல் மாவட்டம் நக்லா மெகா கிராமத்தில் சிவராத்திரியையொட்டி ஷோபா யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யாத்திரையில் பங்கேற்றவர்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தின் மேல் பெரிய ஸ்பீக்கர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன்மேல், சில இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், ஸ்பீக்கரில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், மேலே மின்சார ஒயரில் தொங்கிய காகிதத்தை அப்புறப்படுத்த முயன்றார்.