சென்னை: முகக்கவசத்தை கழற்றுங்கள் நேரில் பார்க்க ஆசையாக உள்ளது என அன்பு கோரிக்கை விடுத்த ஓசூர் பெண்ணிடம் கைபேசியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓசூர் உழவர் சந்தை வழியே சென்ற முதல்வரை, சாலை ஓரம் இருந்த பெண் ஒருவர் நிறுத்தி தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எனவே முகக்கவசத்தை கழற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். பெண்ணின் கோரிக்கையை ஏற்று முகக்கவசத்தை கழற்றிய முதல்வரை கண்டு மகிழ்ச்சியடைந்த பெண், விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி..அதற்கு பெயர் தான் ஸ்டாலின் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.