சென்னை: தமிழகத்தில் புதிதாக நேற்று 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,997 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,943 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 25,15,030 பேர் குணமடைந்துள்ளனர். தற்ேபாது மருத்துவமனைகளில் 20,138 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 33 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 34,230 பேர் உயிரிழந்துள்ளனர்.