தஞ்சை : காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து ஆகஸ்ட் 5-ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் படி, இன்று தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடக்கிவைத்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர்.முன்பாக போராட்டத்திற்கு வருகை தந்த அண்ணாமலை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.