சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.