திருவாரூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக அரசும் காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தன்னாட்சி பெற்ற அதிகாரம் அளித்த நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மத்திய அரசு, அதற்கு ஒரு நிரந்தர தலைவரை கூட நியமிக்காமல் உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும்.