கலைஞர் படத்திறப்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தோம்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கலைஞர் படத்திறப்பு விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் பேட்டியளித்தார். பழனிசாமிக்கு அழைப்பிதழ் மட்டும் வழங்கப்படவில்லை, முறைப்படி அழைப்பு விடுத்தும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி விழாவுக்கு வரவில்லை என கூறினார். மேகதாது அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கமாட்டோம் என கர்நாடக கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கூறினார்.

Related Stories: