சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் வாகன தணிக்கை நடந்தது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.