சென்னை: கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடியுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. கர்ப்பப்பை புற்றுநோயை தாமதமாக கண்டறிவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சென்னை ஐஐடியுடன் இணைந்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள ஐந்து வகையான புரோட்டீனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் கர்ப்பப்பை புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய மூத்த ஆராய்ச்சி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.