சென்னை: ரூ.1.83 கோடியில், 75வது சுதந்திரதின நினைவுத்தூண் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதினம் வைர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகேயும், போர் நினைவு சின்னத்தில் இருந்து 500 அடி இடைவெளியில் ராஜாஜி சாலையில் உள்ள ஒரு இடமும், அண்ணாசாலையில் ஒரு இடமும், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.