சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் நேற்று அளித்தபேட்டி: திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறைவேற்றாததால் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும். ஆட்சிக்கு வந்து 75 நாட்கள் கடந்தும் முழுமையாக ஒரு கோரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து நீட்தேர்வு வரை அனைத்தையும் கூறிவிட்டு தற்போது அதற்கெல்லாம் ஒரு காரணத்தைச்சொல்லி வருகின்றனர்.