சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவரை கடந்த 2013ம் ஆண்டு கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.