திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது: கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆனால் தடுப்பூசியை ஒன்றிய அரசு போதிய அளவு ஒதுக்கீடு செய்யவில்லை. மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 2.8 சதவீதமாக பாதிப்பு குறைந்துள்ளது.