சென்னை: கிராம புறங்களில் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சத்துணவு மாணவர்களுக்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு சமைத்த உணவை தர கோரும் வழக்கில் அரசின் திட்டம்பற்றி அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது.