சென்னை: நியாய விலை கடையில், துவரம் பருப்பு இருப்பு பேணுவதில் குறைபாடு இருந்ததால், ரேஷன் கடை ஊழியர் ஒருவரை அமைச்சர் ஐ.பெரியசாமி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்றும், நேற்று முன்தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் இருப்பு பரிசோதனை, அத்தியாவசிய பொருட்களின் தரம், துவரம் பருப்பு நகர்வு தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தார். ஜூன் திங்களில் கடைகளுக்கு துவரம் பருப்பு நகர்வு மேற்கொண்டதில், சுணக்கம் காணப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிந்தார். அப்பகுதி கடைகளில் 100 சதவீதம் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். நேற்று வடசென்னை பகுதிகளில் இயங்கும், நியாயவிலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.