சென்னை: சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் 133 வருடங்கள் பழமையானது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றியும், அரங்கின் உட்புற தடுப்புகள், தேக்குமர கதவுகள், படிகட்டுகள், பார்வையாளர் மாடம், மேல் தளம், சீன செராமிக் மேற்கூரை உட்பட அனைத்தும் சேதமடைந்தும் பாழடைந்தும் காணப்படுகின்றது. 1887ம் ஆண்டு திறக்கப்பட்ட அரங்கிற்கு இங்கிலாந்து மகாராணி விக்டோரியா பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்த, அரங்கம் தேவை என்பதை திட்டமிட்டு அப்போதைய சென்னையின் முக்கிய பிரமுகர்களால் சுமார் ரூ.16 ஆயிரம் நிதிதிரட்டி இந்த அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.