இந்தியா பிரதமர், உள்துறை அமைச்சரை ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்திக்க என்ன காரணம் உள்ளாட்சித் தேர்தலா? சசிகலா விவகாரமா? Jul 27, 2021 OBS இபிஎஸ் டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் அமித்ஷாவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். சசிகலா விவகாரம் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் உடன் சென்றனர். ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரை மட்டுமே பிரதமர் தனியாக சந்தித்து பேசினார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் தமிழக அரசின் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பிரதமருடனான சந்திப்பில் தடுப்பூசி, மேகதாது அணைப்பிரச்சைனை, சாலைகள் அமைப்பது, மீனவர்கள் தாக்கப்படுவதற்கு தீர்வு உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார். உள்துறை அமைச்சருடன் சந்திப்பு இல்லை, ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் என நேற்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் தோல்விக்கு பின் உள்துறையுடம் நடக்கும் முதல் சந்திப்பு ஆகும்.
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை
மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்; இந்திய பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய கரன்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி