5 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில் செஞ்சி, கடம்பத்துார், ஏகாட்டூர், பாப்பரம்பாக்கம், கொட்டையூர், சத்தரை, கூவம், வெள்ளேரிதாங்கல், திருப்பந்தியூர், மேல்நல்லாத்துார், இலுப்பூர் ஆகிய 11 ஊராட்சிகளில், ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன

இதனால் ஊராட்சிகளில் குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, தூய்மை பணி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செஞ்சி, கடம்பத்துார், ஏகாட்டூர், பாப்பரம்பாக்கம் கொட்டையூர், சத்தரை ஆகிய ஊராட்சிகளில், புதிய ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் கூவம், வெள்ளேரிதாங்கல், திருப்பந்தியூர், மேல்நல்லாத்துார், இலுப்பூர்  ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் பணியிடங்கள் இதுவரை நிரப்பவில்லை. இதனால் எந்த ஒரு அடிப்படை பணியையும் நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், காலியாக 5 ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: