வேலூர்: வேலூர் பார்ஸ்டல் பள்ளியில் கஞ்சா பதுக்கி கைதிகளுக்கு சப்ளை செய்த ஏட்டு உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வேலூர் மத்திய சிறைச்சாலை எதிரே 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகளை அடைக்கும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பிறகு மத்திய சிறைக்கு மாற்றப்படுகின்றனர். இந்நிலையில் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.