தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக பகல் முழுவதும் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.