சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 3 சிங்கங்களின் மாதிரிகள் கொரோனா மறு ஆய்வுக்காக கடந்த 9ம் தேதி தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், நெகட்டிவ் என முடிவு வந்தது. மேலும் 5 சிங்கங்களின் மாதிரிகள் கடந்த 17ம் தேதி அனுப்பப்பட்டது. அதுவும் நெகட்டிவ்.