மும்பை: விமான நிலையங்களில் வர்த்தக விதிமுறைகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை அதானி குழுமம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியதாக அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களில் செபி மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களாக சரிவை கண்டிருந்தது. இந்நிலையில் மற்றுமொரு புதிய சர்ச்சையில் அதானி குழுமம் சிக்கியுள்ளது.