சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று சசிகலா தரப்பில் கேட்டுக் கொண்டதால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போது அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு நான்காவது கூடுதல் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. டி.டி.வி. தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை கைவிடுவதாக தெரிவித்தார். தற்போது சசிகலா அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார்.