திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மராட்டிய பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்ற 2 பேர் கைது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மராட்டிய பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய பக்தர்கள் வந்ததை அறிந்த ஜீப் ஓட்டுநர்கள் புதுச்சேரி நவநீத கிருஷ்ணன், வாயல்பாடு வேணுகோபால் கைவரிசை காட்டியுள்ளார். பக்தர்களிடம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி டிக்கெட்டுக்கு தலா ரூ.900 என ரூ.12,600 பணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: