காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அம்மன் மற்றும் முருகன் கோயில்களுக்கு வழிபாடு செய்ய செல்லும் பக்தர்கள் அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறினால் 3வது அலை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.