முக்கிய செய்தி சென்னை கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை Jul 18, 2021 பிரதம செயலாளர் சென்னை: கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று தடுப்பில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்படுவது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்குவார். தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் 3-வது கொரோனா தொற்று அலை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றியும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்