தஞ்சை : தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று வேல்முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாரியம்மன் கோயில் வெள்ளாள செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(38). அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர். பேட்டரி நிறுவனம் ஒன்றில் மேலாளராக உள்ளார்.இவர் தனது மகளுடன் 10ம் வகுப்பு படிக்கம் 15வயது சிறுமிக்கு தனத மகள் அனுப்புவது போல் வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பியுள்ளார். கடந்த 3 மாதத்துக்கு முன் சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவர் சிறுமியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் பாட்டி வந்துவிட்டதால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.