ஹரியானா : பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜீத் சித்து நியமிக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.பாஜகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவஜீத் சித்து, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்-ஐ வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார்.இந்த நிலையில் அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.