மும்பை: மும்பை, மும்பை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மும்பையில் சாந்தாகுரூசில் 253.3 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இது, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூலையில் பெய்த 3வது அதிக மழையாகும். இதற்கு முன் 2009, ஜூலை 15ம் தேதி 274.1 மி.மீ மழையும். 2019, ஜூலை 2ம் தேதி 376.2 மி.மீ மழையும் பெய்துள்ளது. சாந்தாகுரூசில் ஜூலை 1ம் தேதியில் இருந்து நேற்று காலை வரை 1,544.9 மி.மீ மழையும், கொலாபாவில் 1,068.4 மி.மீ மழையும் பெய்துள்ளது.