சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவுகார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ‘தி ஓரியன்டல் பெனிபிட் மற்றும் டெபாசிட் சொசைட்டி லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் பலர் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் வழக்கு பதிவு யெய்ப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.