சவுகார்பேட்டை நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்

சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவுகார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ‘தி ஓரியன்டல் பெனிபிட் மற்றும் டெபாசிட் சொசைட்டி லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் பலர் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் வழக்கு பதிவு யெய்ப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 எனவே, இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் (தொலைபேசி எண்: 044-22504332) சென்னை பொருளாதார குற்றப்பிரிவு -2 தலைமையிடம் சிட்கோ பழைய கட்டிட வளாகம் திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி சென்னை-32 என்ற முகவரியில் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். ஏற்கனவே புகார் கொடுத்திருந்தால் அவர்களும் தகுந்த ஆதாரத்தை நேரில் கொண்டு வரலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories: