சென்னை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 4 பேர் பதவியேற்பு Jul 17, 2021 DNPSC சென்னை: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 4 பேர் நேற்று பதவியேற்று ெகாண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன், பேராசிரியர் க.ஜோதி சிவஞானம், முனைவர் க.அருள்மதி, ஆ.ராஜ் மரியசூசை ஆகியோரை கடந்த 13ம் தேதி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய உறுப்பினர்கள் 4 பேரும் நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தேர்வாணையத்தின் தலைவர் கா.பாலசந்திரன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். நிகழ்வின் போது தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா மற்றும் தேர்வாணைய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்